டெல்லி: உலக நாடுகளில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்கியா மிகவும் முக்கியமானவை.
மொபைல் மற்றும் வையர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்துவதினால் உடலில் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி கட்டுரை பல வந்தாலும், இந்தியாவில் வையர்லெஸ் சாதனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஜூன் மாத கணக்கின் படி இந்தியாவில் 98 கோடி மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் 30 கோடி இண்டர்நெட் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இவ்வருட இறுதிக்குள் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடியாகவும், இண்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடுத்த 2 வருடத்தில் 50 கோடியாக உயரும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.