டெல்லி: உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களைக் காக்கும் பொருட்டு மத்திய அரசு இந்தியாவில் ஸ்டீல் இறக்குமதியைத் தடுக்க இதன் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.
இந்திய உற்பத்தி நிறுவனங்கள் சீனா, பிரட்டன் போன்ற நாடுகளில் இருந்து அதிகளவிலான ஸ்டீலை இறக்குமதி செய்து வருவதால், இந்திய நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் களையவே மத்திய அரசு ஸ்டீல் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியுள்ளது.
வரி உயர்வு
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி ஸ்டீல் இறக்குமதி வரையை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் டிஎம்டி பார்களின் மீதான வரையை 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஈஈபிசி
என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் அமைப்பின் தலைவர் அனுபம் ஷா கூறுகையில், 'இறக்குமதி வரியைக் குறைக்காவிட்டால், இந்திய நிறுவனங்களின் உற்பத்தி இலக்கை அடைய முடியாது' எனத் தெரிவித்தார்.
விலை நிலை
இந்திய உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்புகளைப் பெற எதிரானது இல்லை. இந்தியாவில் ஸ்டீல் பொருட்களின் விலை நிலை அதிகளவிலான மாற்றத்தைக் கொண்டுள்ளதால், உற்பத்தி நிறுவனங்கள் சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்கிறது.
வரியைக் குறைக்க வேண்டும்
என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் அமைப்புத் தற்போது வரி குறைக்க வேண்டும் என மத்திய அரசை நாடியுள்ளது.