டெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அமெரிக்கா, சீனா போன்ற முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இணையாக உயர்ந்து 8000000000000 டாலரை (8 டிரில்லியன் டாலர்) எட்டும்.
இந்தியாவில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்கு முன்னரே இந்த இலக்கை இந்தியா எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3வது இந்தியா
அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது எனவு கூறினார்.
கணிப்புகள்
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 10 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி உயரும் எனக் கணித்துள்ளது.
2 லட்சம் கோடி டாலர்
தற்போதைய நிலையில் நாட்டின் ஜிடிபி அளவு 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் கணிப்புகளின் படி அடுத்த 15 ஆண்டுகளில் இதன் அளவு நான்கு மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
வளர்ச்சி
2003-2004ஆம் ஆண்டு முதல் 2012-2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.
வறுமைக் கோடு
2003-2004ஆம், 2012-2013ஆம் ஆண்டு இடைப்பட்ட காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் (பிபிஎல்) எண்ணிக்கை குறைந்துள்ளது.
தனி நபர் வருமானம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 40 ஆண்டுகள் வரை தனி நபர் வருமானம் 50 சதவீத அளவு மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்தது. தாராள மயமாக்கலுக்குப் பிறகுதான் 100 சதவீத அளவுக்கு உயர்ந்தது. 2000 ஆண்டுக் காலகட்டத்தில் தனி நபர் வருமானம் 300 சதவீத அதிகரித்தது.