டெல்லி: கடந்த ஒரு வருடமாக இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முதலீடுகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிப்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி அமைப்புத், சில மாதங்களுக்கு முன் இந்த உணவுகளுக்கு போட்டியாக டாமினோஸ் பிட்சா நிறுவனத்துடன் இணைந்து, ரயில் பயணிகளுக்கு புதிய சேவையை அளிக்க துவங்கியது.
இத்தகைய சேவையை விரிவாக்கம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி அமைப்புத் தற்போது கேஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
12 ரயில்கள்
முதல் கட்டமாக டெல்லியில் இருந்து விசாகப்பட்டனம், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் செல்லும் 12 ரயில்களில் அடுத்த 10 நாட்களில் இச்சேவை விரிவாக்கப்படத் திட்டமிட்டுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.
பேன்ட்ரி கார்ஸ்
தற்போது இத்துறையில் பேன்ட்ரி கார்ஸ் எனப்படும் சமையல் செய்ய ஏதுவான ரயில் பெட்டிகள் இல்லை என்பதால், சேவை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
பெட்டி தயாரான உடனேயே ராஜ்தானி மற்றும் டுரோன்டோ ரயில்களிலும் இச்சேவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
எப்படிச் சிக்கன் பெறுவது.
ரயில்களில் கேஎஃப்சி சிக்கன் வேண்டும் என்றால், பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையத் தளத்திற்குச் சென்று அல்லது இலவச தொலைப்பேசி எண்ணை கொண்டு ஆர்டர் செய்யலாம் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கேஎஃப்சி நிறுவனம்
இதுகுறித்துக் கேஎஃப்சி இந்தியா நிறுவன தலைவர் துருவ் கவுல் கூறுகையில், "ரயில்களில் சேவை அளிக்கும் திட்டத்தில் மிகவும் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளோம், இதனை மேம்படுத்த சில நாட்கள் தேவைப்படுகிறது."
மிகப்பெரிய வாய்ப்பு
மேலும் அவர் கூறுகையில், இந்திய ரயில்வே துறையில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம், எனவே இந்தியாவில் எங்களுக்கு வர்த்தகம் செய்யப் புதிய சந்தை கிடைத்துள்ளது.
தினமும் 1.3 கோடி பயணிகள்
இந்திய ரயில்வே துறை தினமும் 12,500 பயணிகள் போக்குவரத்து ரயில்களை இயக்குகிறது. இதில் சுமார் 1.3 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். உண்மையிலே மிகப்பெரிய சந்தை தான்.
டாமினோஸ்
கடந்த பிப்ரவரி மாதம் டாமினோஸ் நிறுவனம் தனது சேவை இந்தியா ரயில்வே துறையில் துவங்கியது. தற்போது இந்நிறுவனம் தனது சேவையைச் சுமார் 200 ரயில்களில் விரிவாக்கம் செய்தாலும், தினமும் 350 பிட்சா-களை மட்டுமே விற்பனை செய்கிறது.
பிற நிறுவனங்கள்
மேலும் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு பிட்சா ஹட் மற்றும் சப்வே நிறுவனங்களிடமும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications