டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய வளைகுடா நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறது.

முதலீடு குவிகிறது...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்யக் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இந்நிறுவனத் தலைவர் அஜய் சிங்-கிடம் பேசிக்கொண்டு இருக்கும் இவ்வவேளையில், துபாய் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான FLYDUBAI நிறுவனம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது.
80 சதவீத உறுதி..
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இருக்கும் தற்போதைய நிலையில் முதலீட்டிற்கு மறுக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆகையால் கத்தார் ஏர்வேஸ் மற்றும் ஃப்லைதுபாய் ஆகிய நிறுவனங்களின் முதலீடு 80 சதவீத உறுதி.
முதலீட்டாளர்களுக்கு...
எனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை ஸ்பைஸ்ஜெட் நிறுவன பக்கம் திருப்பினால் கண்டிப்பாக லாபம் பார்த்து விடலாம்.
ஸ்பைஸ்ஜெட்
இதுகுறித்து அஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகளை ஏற்ற இரண்டு மாதத்திற்குள் இவ்விரு நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியது. இதன் தொடர்ச்சியாக நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
ரூ.3,210 கோடி நஷ்டம்
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் சுமார் ரூ.3,210 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
கத்தார் ஏர்வேஸ்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தும் வேளையில் கத்தார் ஏர்வேஸ், இண்டிகோ நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்ற பல வருடமாகப் போராடி வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தில் தலைவர் ராகுல் பாத்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications