பெங்களூரு: இந்திய சந்தையில் தனது வளர்ச்சியை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளதாக உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமேசான் இன்று முதல் இந்திய வர்த்தகம் மற்றும் விரிவாக்கத்தில் அதிகளவிலான கவனத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
பிரைன் டி ஒல்சவஸ்கி
இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இந்நிறுவன தலைமை நிதியியல் அதிகாரி பிரைன் இந்திய சந்தைக் குறித்து மிகவும் சாதகமான தகவல்களை அளித்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவில் வர்த்தம் விரிவடைந்துள்ளது. குறிப்பாக விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவிலான நம்பிக்கை உருவாகியுள்ளது.
இதை மட்டும் பார்க்க வேண்டாம்...
ஆதார் அட்டையின் நன்மைகள்..
ஆதார் அட்டையில் என்ன இருந்த நமக்கு என்ன.. நான் அதை பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ள மாட்டேன்..
தெரிந்துக்கொள்ள வேண்டுமா?.. கடைசி ஸ்லைடரை பார்க்கவும்...
முதலீடு அதிகரிக்கப்படுமா..
இந்தியாவில் ஏற்கனவே பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக சுமார் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ள அமேசான் மேற்படி முதலீட்டு திட்டங்கள் குறித்து எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
முக்கிய பணிகள்
இக்கூட்டத்தில் இந்திய சந்தை தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் மற்றும் விரைவுப்படுத்துவதற்கு முக்கிய பகுதிகளில் விலை நிலை மற்றும் விநியோக முறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரைன் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மேம்பாடு
2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் புதிய டேட்டா சென்டர் மற்றும் சேவையை கிளவுட் தொழில்நுட்பத்திற்கு இடம்மாற்றம் செய்வதில் பல மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அமேசான் எப்படி?
பிளிப்கார்ட் துவங்கி 6 ஆண்டுகளுக்கு பின்பு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் கால் தடம்பதித்த அமேசான், தற்போது 25 மில்லியன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இது பிளிப்கார்ட் நிறுவனத்தை விட 5 மில்லியன் அதிகம்.