28 சதவீத லாப உயர்வில் யெஸ் வங்கி!
மும்பை: தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி, 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் லாப அளவு 27.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதல் காலாண்டில் இவ்வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் அதிகரித்து 551.2 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் நிகரலாபம் 431 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் வங்கியின் மொத்த வருமானம் அளவு 3,797 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த வருடம் ஜூன் காலாண்டில் அதன் அளவு 3,093 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 0.33 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 0.46 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications