ரெட்மண்ட்: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது வர்த்தகத்தை மீட்டெடுக்கவும், நோக்கியா இணைப்பின் மூலம் ஏற்பட்ட பாதிப்பை குறைக்கவும் 29ஆம் தேதி தனது புதிய தயாரிப்பான விண்டோஸ் 10 மென்பொருளை அறிமுகம் செய்தது.
மென்பொருள் வெளியாகி 2 நாட்களில் இந்நிறுவனத்திற்கு 1.4 கோடி புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஆயினும் மக்கள் சமுக வலைதளத்தில் விண்டோஸ் 10 மென்பொருளை கலாய்த்து வருகின்றனர்.
இலக்கு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் படி அடுத்த 3 வருடத்தில் விண்டோஸ் 10 மென்பொருள் 1 பில்லியன் ஆதாவது 100 கோடி பயன்பாட்டாளர்களைப் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சமுக வலைதளக் கூத்து
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு பக்கம் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டாலும், சமுக வலைத்தளத்தில் விண்டோஸ் 10 மென்பொருளை வைத்து காமெடி செய்து வருகிறார்கள்.
டவுன்லோடு
மேலும் இப்புதிய மென்பொருளுக்கான டவுன்லோடு சேவை எவ்விதமான தடையும் இன்றி இயங்கி வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
கடந்த சில வருடங்களில் பல மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் ஆப்பிள் நிறுவன பொருட்களை நாடி செல்கின்றனர். இதனால் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் சந்தையில் பலத்த வர்த்தகப் பாதிப்பை அடைந்தது.
கிளவுட் மற்றும் பிற சேவை
மேலும் சந்தையில் அமேசான், அப்பாசி போன்ற பல நிறுவனங்கள் சிறப்பான கிளவுட் மற்றும் டேட்டாபேஸ் சேவை வழங்குவதால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இத்துறை தயாரிப்புகள் அதிகளவிலான பதிப்பை அடைந்துள்ளது.
மக்கள் கருத்து
இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்து அதிகளவிலான கருத்துகள் வெளியில் வரவில்லை, ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில் கடந்த 2 நாட்களில் இப்புதிய மென்பொருள் குறித்த கருத்து சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
'பை பை'
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications