மும்பை: இந்திய தனியார் வங்கித்துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 12 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் இவ்வங்கியின் நிகர லாப அளவு 12% அதிகரித்து 2,976 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,655 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் வருவாய் 15,802 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 14,616 கோடி ரூபாயாக இருந்ததது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் வராக் கடன் அளவு 3.05 சதவீதமாக இருந்தது தற்போது 3.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.