சென்னை: உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை இக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது.
இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தலாம்.
பல வருடமாகத் திருப்பதி உண்டியல்களில் பக்தர்கள் கடவுள் பெயரில் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களைச் செலுத்தி வந்தனர், இதனை முறைப்படுத்தவே திருப்பதி தேவஸ்தானம் புதிய டீமேட் கணக்கை திறந்துள்ளது. இனி பக்தர்கள் பங்கள் மற்றும் பத்திரங்களைக் கடவுளின் பெயரிலேயே செலுத்தலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா அமைப்புடன் இணைந்து 1601010000384828 என்ற எண்ணில் டீமேட் கணக்கை திறந்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக ஒரு கோவில் கட்டுப்பாட்டு அமைப்பு டீமேட் கணக்கை திறந்துள்ளது இதுவே முதல் முறை.
இதுகுறித்து CDSL அமைப்பின் தலைவர் பி.எஸ் ரெட்டி கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உண்டியலில் விழுத்துள்ள கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளை முறையாகப் பராமரிக்கவும், அதனைப் பயன்படுத்துவதற்காகவே டீமேட் கணக்கை திறந்துள்ளது.