மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் நோக்கத்தில் பிரத்தியேகமாக ஏர்டெல் சப்ரைசர்ஸ் என்னும் புதிய திட்டத்தைச் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் படி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் கட்டணத்தில் 30 சதவீத சலுகையை அளிக்கிறது.
அதுமட்டும் அல்லாமல் இவர்களுக்கான இணைப்பில் அதிவேக இண்டர்நெட் மற்றும் கூடுதல் டேட்டாவும் அளிக்க உள்ளதாக ஏட்டெல் தெரிவித்துள்ளது.
அசோக் கணபதி
'ஏர்டெல் சப்ரைசர்ஸ்' திட்டம் குறித்து இந்நிறுவனத்தின் ஹப் தலைமை நிர்வாக ஆதிகாரியான அசோ கணபதி கூறுகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாகவே 'ஏர்டெல் சப்ரைசர்ஸ்' அறிமுகப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா
சமீபத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் இலவச வாய்ஸ் கால் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இத்திட்டம் சந்தையில் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனுடன் இலவச Anti Virus மென்பொருள் மற்றும் வை-பை ரவுட்டர் ஆகிய சேவைகளையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது.
பழைய வாடிக்கையாளர்
இந்நிலையில் பழைய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து நிறுவனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளக் கூடுதல் டேட்டா அல்லது வேகமான சேவையை அளிக்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏர்டெல்
1990களில் முதல் முறையாக இந்தியாவில் பிராடுபேண்ட் சேவையை அறிமுகப்படுத்திய ஏர்டெல், தற்போது முதல் முறையாக அதிவேக மொபைல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
4ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தனது சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் சுமார் 296 நகரங்களில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..