டெல்லி: இந்தியா முழுவதும் அசத்தலான விற்பனையில் இருந்த மேகி நூடுல்ஸ் பிராண்டில் அதிகளவிலான நச்சுத்தன்மை உள்ள காரணத்தினால் இந்திய உணவு கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) இதன் தயாரிப்பு மற்றும் விற்னபனைக்கு இந்திய சந்தையில் முற்றிலும் தடை விதித்தது.
ஆனால் இத்தயாரிப்புக்கு அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு வாரியமான எப்டிஏ அமைப்பு நச்சுத் தன்மையற்றது என அறிவித்துள்ளது.
தடை
இந்தியாவில் இத்தயாரிப்புக்குத் தடை செய்யப்பட்ட பின் 6 நாடுகளில் சோதனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் மேலும் ஒரு நாடாகத் திங்கட்கிழமை மாலையில் அமெரிக்காவில் நடந்த சேதனையில் எப்டிஏ அமைப்பு இதற்கு ஒப்புதல் அளித்தும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.
7வது நாடுகள்
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் மேகி நூடில்களுக்கு 7 நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, பிரட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளது.
FSSAI அமைப்பு
நெஸ்லே நிறுவனத்தின் இத்தயாரிப்புக்கு 7 நாடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டும் இந்திய உணவு கட்டுப்பாட்டு வாரியமான FSSAI ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஜுன் 5
கடந்த ஜூன் 5ஆம் தேதி இந்நிறுவன தயாரிப்புகள் மற்றும் விற்பனைக்கு இந்திய சந்தையில் தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் இந்நிறுவனத்தின் விற்பனை இந்திய சந்தையில் அதிகளவில் குறைந்துள்ளது.
2,000 கோடி ரூபாய் வர்த்தம்
இந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் மேகி தடையால் இந்நிறுவனம் 2000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இதில் 320 கோடி ரூபாய் வர்த்தகச் சரிவும், 1270 கோடி ரூபாய் பிராண்ட் மதிப்பையும் இழந்துள்ளது.