மும்பை: இந்தியாவில் தனியார் வங்கி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் களைய பிரத்தியேகமாகத் தனி அமைப்பை நிறுவப்பட்டுள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBOA) இன்று அறிவித்துள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுடன், தனியார் வங்கி ஊழியர்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி பொது மற்றும் தனியார் வங்கி அனைத்தும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
7 பிரச்சனைகள்
வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை, நிறந்திர பணியிடங்களுக்கான ஒப்பந்தம், போன்ற 7 பிரச்சனைகளை முன்னிறுத்தி அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBOA) வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பெங்களூரு
தனியார் வங்கி ஊழியர்களுக்கான தனிச் சங்கத்தைத் திங்கட்கிழமை பெங்களூரில் நிறுவப்பட்டது.
வெங்கடேஷ் பாபு
இப்புதிய அமைப்பின் தலைவராகக் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் வெங்கடேஷ் பாபு தலைமை வகிப்பார் எனவும் AIBOA தனது செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளது.
AIBOA அமைப்பு
இன்றைய நாள் மூலம் தனியார் வங்கிகளுக்கான பொது அமைப்புகள் எதுவும் இல்லை, இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் களைய முடியாமல் தவித்து வந்தனர். நீண்ட காலமாக AIBOA அமைப்பு தனியார் வங்கி ஊழியர்களுக்கான தனி அமைப்பை வழியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கோட்டாக் மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா வங்கி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கோட்டாக் மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா வங்கி இணைப்பை எதிர்த்து ஐஎன்ஜி வைசியா வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னரே தனி அமைப்புக் குறித்த பணிகள் துரிதமாகச் செய்யப்பட்டது.
டாப் 10 மலையாள பணக்காரர்கள்!
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..