டெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஜூலை மாதம் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்து 67.45 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 52.16 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை மாதம் இண்டிகோ நிறுவனம் மட்டும் சுமார் 24.17 இலட்சம் பயணிகளைக் கொண்டு இயங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் பின் ஜெட் ஏர்வேஸ் 13.35 லட்ச பயணிகள், ஏர் இந்தியா 10.94 லட்ச பயணிகள், ஸ்பைஸ்ஜெட் 8.31 லட்ச பயணிகள்ஷ கோஏர் 5.66 லட்சம் பயணிகள், ஏர் ஏசியா 1.26 லட்சம் பயணிகள், டாடாவின் விஸ்தாரா நிறுவனம் 0.95 லட்சம் பயணிகளைக் கொண்டு இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயங்கியுள்ளது.
இக்காலகட்டத்தில் பிராந்திய விமான நிறுவனங்களான ஏர் கோஸ்டா மற்றும் ஏர் பிகாசஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கியுள்ளது.