சென்னை: இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அசோசாம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2012-13-ம் ஆண்டில் இந்திய உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களைக் ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னிலை வகுக்கிறது.
தமிழ்நாடு
இந்தியாவில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை சிறந்து விளங்கும் 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட இவ்ஆய்வில், 2012-13-ம் ஆண்டுக் காலகட்டத்தில் மொத்தம் 1.29 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு சுமார் 15 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் மொத்த வேலைவாய்ப்புகளின் 14 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அசோசாம் அமைப்பு
அசோசாம் அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் தமிழகத்தில் உற்பத்தித் துறை மிகச் சிறப்பாகச் செயலாற்றுவதாகவும், ஆனால் இன்னமும் சில குறிப்பிட்ட பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.
ஆள் பற்றாக்குறை
தமிழ்நாட்டின் உற்பத்தி துகறையில், ஜவுளித் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் பீகார், ஒரிசா மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி வருவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
பிற துறைகள்
மேலும் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தித் துறை, ஜவுளி, ரசாயனம், ரசாயன பொருள் உற்பத்தி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கும் அளவீடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்றும் அசோசாம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications