சென்னை: அடுத்தடுத்த வேலைநிறுத்த போராட்டத்தின் மூலம் வங்கிகளுக்கான விடுமுறையை அதிகரிக்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு, ஒப்புதல் ஆணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போது வங்கிகள் அனைத்துச் சனிக்கிழமையும் காலை 10 முதல் 2 மணி வரை வங்கி செயல்படுகிறது. வரும் செப்டம்பர் முதல் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை முழுமையாகச் செயல்படும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்துப அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.ஹெச் வெங்கடாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.