மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா கேபிடல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் (டிஓஎப்) நிறுவனம் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனம் உபர் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யுள்ளது. இந்த முதலீட்டு இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை இந்நியாவில் முழுமையாக வரிவாக்கம் செய்ய உதவும் என உபர் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்ஸி நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இரண்டாவது இந்திய நிறுவனமாக டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த டைம்ஸ் இன்டர்நெட் 150 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.