மும்பை: மத்திய அரசின் 69,500 கோடி ரூபாய் நிதிதிரட்டும் திட்டத்தின் ஒரு பங்காக இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைத் திங்கள்கிழமை அரசு விற்றுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9,379 கோடி ரூபாய்த் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் தோராயமாக 24 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும்போது முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்தியன் ஆயில் பங்கு மதிப்பில் 2 சதவீத தள்ளுபடியுடன் ஒரு பங்கின் ஆரம்ப விலை ரூ. 387 என மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் இந்தியன் ஆயில் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ. 9,379 கோடி வரை திரட்டியதாக மத்திய பங்கு விலக்கல் துறை செயலாளர் தெரிவித்தார்.
இந்த விற்பனையில் 90 சதவீத பங்குகளை மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விற்பனை செய்யப்பட்ட 10 சதவீத இந்தியன் ஆயில் பங்கின் விலையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த 68.6 சதவீதப் பங்கில் 10 சதவீத அளவை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ. 9,300 கோடி (1.4 பில்லியன் டாலர்) ஈட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பங்கு விற்பனை மூலமாக மத்திய அரசு ரூ. 69,500 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications