மும்பை: மத்திய அரசின் 69,500 கோடி ரூபாய் நிதிதிரட்டும் திட்டத்தின் ஒரு பங்காக இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைத் திங்கள்கிழமை அரசு விற்றுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9,379 கோடி ரூபாய்த் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் தோராயமாக 24 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும்போது முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்தியன் ஆயில் பங்கு மதிப்பில் 2 சதவீத தள்ளுபடியுடன் ஒரு பங்கின் ஆரம்ப விலை ரூ. 387 என மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் இந்தியன் ஆயில் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ. 9,379 கோடி வரை திரட்டியதாக மத்திய பங்கு விலக்கல் துறை செயலாளர் தெரிவித்தார்.
இந்த விற்பனையில் 90 சதவீத பங்குகளை மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விற்பனை செய்யப்பட்ட 10 சதவீத இந்தியன் ஆயில் பங்கின் விலையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த 68.6 சதவீதப் பங்கில் 10 சதவீத அளவை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ. 9,300 கோடி (1.4 பில்லியன் டாலர்) ஈட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பங்கு விற்பனை மூலமாக மத்திய அரசு ரூ. 69,500 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications