டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய 2014-15ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி அளவு 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் சீனாவை வெற்றிகொள்ள முடியவில்லை என்பது சற்று வருத்தமாகச் செய்து.
இதனால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகச் சீனா இடம்பித்துள்ளது.
மூலதனம்
மேலும் மூலதன உருவாக்குவதில் இந்தியா தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் இதன் அளவு 28.7 சதவீதமாக உள்ளது, 2013-14ஆம் ஆண்டில் இது 29.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறை
இத்தகைய நிலையிலும் உற்பத்தித் துறை 7.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 5.3 சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறை வளர்ந்துள்ளது என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது பொருள்.
கணிப்புகள்
இதனால் மத்திய புள்ளிவிவர அலுவலகம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தைக் குறைவான மதிப்பீட்டில் இருந்து 7.4 சதவீதமாகக் கணித்துள்ளது.
ஆர்பிஐ
மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர், அடுத்து வரும் நாணய மறுஆய்வுக் கொள்கையில் வட்டிக் குறைப்பை அறிவிக்கும் எனத் தெரிகிறது.