டெல்லி: 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிப்புகளுக்குக் குறைவாக 7 சதவீத்தை அளவைப் பதிவு செய்துள்ளது.
இதனால் நாளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் கணிசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளது.
கணிப்புகள்
இக்காலாக்கட்டத்தில் ஜிடிபி அளவு 7.56 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது, ஆனால் 7 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கணிப்புகளைப் பொய்யாக்கும் விதத்தில் ஜிடிபி சரிந்துள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவீதம் வரை உயர்ந்தாலும், 7% மிகவும் குறைவான வளர்ச்சியே.
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தி அளவு 2.6 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 0.4 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கட்டுமான துறை கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.4 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சுரங்கத்துறை, மின்சாரம் உற்பத்தி ஆகியவை சரிவை சந்தித்துள்ளது.