சென்னை: இந்தியாவில் பொதுத்துறை வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு அல்லாத இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் இணைந்து நாளை (செப்டம்பர் 2ஆம் தேதி) மத்திய அரசு ஊழியர்கள் கொள்கைகளை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளது.
இதனால் நாளை பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்காது.
வேலைநிறுத்த போராட்டம்...
இந்த வேலைநிறுத்த போராட்டம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராகச் செய்யப்படுகிறது என ஜெனரல் இன்சூரன்ஸ் எம்பிளாயீஸ் ஆல் இந்தியா அசோசியேஷன் அமைப்பின் துணை செயலாளர் கோவிந்தன் தெரிவித்தார்.
என்ன பிரச்சனை
இந்தப் போராட்டத்தின் மூலம் ஆயுள் காப்பீடு சேவை அளிக்காத காப்பீட்டுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய பிரச்சனை, பதவி உயர்வில் விரைவான நடவடிக்கை, வெளிநிறுவனங்களின் பங்கீட்டைக் குறைக்கவும் செய்யப்படுகிறது.
வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனையைச் சரி செய்ய மத்திய அரசுக்கு இது மேலும் ஒரு பலபரிட்சை.
14 அமைப்புகள்
நாளை நடக்கும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் இந்தியாவில் மொத்தம் 14 அமைப்புகள் கலந்துகொள்கிறது.
AIEBA அமைப்பு
மேலும் AIEBA அமைப்பின் தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் தொடர்ந்து ஊழியர்களின் உரிமை பரித்தல், வங்கி தனியார்மயமாக்கல், வங்கிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்து வருகிறது. இதனை எதிர்த்து நாளை வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் எனத் தெரிவித்தார்.
தனியார் வங்கி ஊழியர்கள்
சில வாரங்களுக்கு முன் தனியார் வங்கி ஊழியர்களுக்கான ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. நாளை நடக்கும் இந்த போராட்டத்தில் இந்த அமைப்பு கலந்துக்கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டது.


Click it and Unblock the Notifications