டெல்லி: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிளவிலான முதலீட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வரிவாக்கம் அடைந்து வருகிறது.
இந்த விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் விமானப் பயணிகளுக்குத் தங்களது பயணத் தொகையில் தொடந்து சலுகை மற்று் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஜூலை மாத்தில் இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சுமார் 28.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
பிற நாடுகள்
இக்காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, பிரேசில், மற்றும் அமெரிக்கச் சந்தைகளை விடவும் அதிகமான விமானப் பயணிகளைப் பெற்று சர்வதேச விமானப் போக்குவரத்தில் இந்திய சந்தையில் முதல் இடத்தில் உள்ளதாகச் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (IATA) தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும் அடுத்தச் சில வாரங்களில் இந்நிலை முற்றிலும் மாறுபட்டு விமானப் போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்படும் நிலையும் உருவாக உள்ளது எனவும் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்தும்
உலகளவில் இக்காலகட்டத்தில் விமானப் போக்குவரத்து 7.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 6.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா மற்றும் இந்தியா
சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளில் விமானப் போக்குவரத்து அதிகளவில் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவீடு அதிகரித்துள்ளது.
10.9% வளர்ச்சி
இக்காலகட்டத்தில் சீனா விமானப் போக்குவரத்து எண்ணிக்கை 10.9 சதவீதம் வரை உயர்ந்து உலகளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.