டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்த, இத்துறை செயற்கைகோள் உதவியுடன் புகைப்படங்களை எடுக்க இந்திய ரயில்வே துறை 'ஐஎஸ்ஆர்ஓ' அமைப்புடன் இணைந்துள்ளது.
இத்திட்டத்தில் ஐஎஸ்ஆர்ஓ மற்றும் ரயில்வே துறை ஜிபிஎஸ், ஜிஐஎஸ், ஆர்எஸ் எனப்படும் ரிமோட் சென்சிங் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டத்திற்கான முதலீடு குறித்த தகவல்களை ரயில்வே துறை தெரிவிக்கவில்லை. இப்புதிய திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே துறை புதிய பரிமானத்தில் வளர்ச்சி அடைய உள்ளது.
இப்புதிய திட்டத்தில் பணியாற்றும், ரயில்வே துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தில் இஸ்ரோ உதவியுடன் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே தடங்கள் மற்றும் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டுமானம், நிலம், தொழிற்சாலை என அனைத்தையும் மிகப்பெரிய அளவில் ஜிஐஎஸ் மேப்பிங் செய்யப்பட உள்ளது எனத் கூறினார்.
இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கூடிய விரைவில் இந்திய ரயில்வே மற்றும் ஐஎஸ்ஆர்ஓ அமைப்புகள் கையெழுத்திடும் என இந்திய ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.