மும்பை: இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 300 சதவீத லாப உயர்வுடன் சந்தையின் பிற நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
300% லாப உயர்வு
2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விமான எரிபொருள் விலை அதிகமாக இருந்ததால், இந்நிறுவனத்தின் லாப அளவு வெறும் 317 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் இந்நிறுவனத்தின் லாபம் 300 சதவீதம் வரை உயர்ந்து 1,304 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருவாய்
இந்நிலையில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளைப் பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏதும்மில்லை. 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் அளவு 11,447 கோடி ரூபாயாகவும், 2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 14,320 கோடியாக மட்டுமே இருந்தது.
648 விமானப் பயணங்கள்
மேலும் இந்நிறுவனம் தற்போது ஒரு நாளில் 97 விமானங்களைக் கொண்டு 648 விமானப் பயணங்களை இயக்கி வருகிறது.
பங்குச்சந்தை
மேலும் இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடவும் திட்டமிட்டு, இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதன் மூலம் இண்டிகோ 100 கோடிக்கும் அதிகமான நிதியைப் பெற முடியும்.
செபி
மேலும் சந்தையைக் கட்டுப்பாட்டு அணையத்திடம் இண்டிகோ பங்குச்சந்தையில் இறக்குவதற்கான முதற்கட்ட ஒப்புதல்களை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications