டெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கு சேவையை அளித்து.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வங்கித்துறையில் சுமார் 1.2 லட்சம் ஏஜென்டுகளை நியமித்துள்ளது.

ஏதற்கு இந்தத் திடீர் நியமனம்...
இந்தியாவில் நகரங்களைக் காட்டிலும் கிரமங்கள் மிகவும் அதிகம் என்பதால் அனைத்து இடங்களிலும் வங்கிக் கிளைகளை நியமிக்க முடியாத நிலையில், வங்கி அமைப்புகள், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் Business Correspondent Agents அல்லது Bank Mitras எனப்படும் ஏஜெண்டுகளை நியமித்துள்ளது.

இத்திட்டத்தின் இலக்கை அடைய வங்கி நிர்வாகம் சுமார் 1,23,308 ஏஜென்டுகளை நியமித்து அரசின் இலக்கை எட்ட முயற்சி செய்து வருகிறது.
இவர்கள் அனைவரும் மக்கள் மற்றும் வங்கிகளுக்கு மத்தியில் இயங்குபவர்கள்.


Click it and Unblock the Notifications