டெல்லி: நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான Naukri.com செய்த ஆய்வில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2015ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனம் மற்றும் சந்தைகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. நிதியாண்டின் முதல் 4 மாதங்களிலேயே வருடாந்திர அளவுகளில் 13 சதவீத உயர்வு உண்மையிலேயே மதிப்புதக்க வளர்ச்சி என Naukri.com நிறுவனத்தின் துணை தலைவர் வி.சுரேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த 13 சதவீத வளர்ச்சியில் ஐடி, வங்கியியல் மற்றும் பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இப்படியலில் பிற துறைகளை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இதில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு நியமண விகிதம் அதிகளவில் குறைந்துள்ளது என Naukri.com தெரிவித்துள்ளது.