டெல்லி: அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள பிரதமர் மோடியின் 7 நாள் சுற்றுப்பயணத்தில், வியாழக்கிழமை போயிங் நிறுவனத்திடம் இருந்து 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
7 நாள் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா, அயர்லாந்து நாடுகளுக்குப் புதன்கிழமை மாலையில் அமெரிக்கச் செல்ல உள்ளார்.
புதிய முதலீடு மற்றும் வர்த்தகம்..
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறையைச் சார்ந்த முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் அதிகரிக்கவும், புதிய முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
16,000 கோடி கோடி
மோடியின் இப்பயணத்தில் அமெரிக்கப் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியாவும் போயிங் நிறுவனமும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
2013-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்துக்குத் தற்போது மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
ரஷ்யா தயாரிப்புகள்
இந்திய ராணுவத்தில் தற்போது பெரும்பாலும் ரஷ்யா தயாரிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்திய பாதுகாப்பு துறையை மேம்படுத்த அமெரிக்காவிடம் இந்த அதிநவீனரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
இன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே போர் விமானங்கள் முதல் ஹெலிகாப்டர்கள் வரை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ளது.
வங்கி IFSC குறியீடு
வங்கி IFSC குறியீட்டை தேடுவதில் குழப்பமா? கவலை வேண்டாம் இதை மட்டும் கிளீக் பண்ணுகோ...
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..