செயல் இழந்த விமான நிலையங்களை மீண்டும் உயிர்ப்பிக்க மத்திய அரசு திட்டம்..!

கொல்கத்தா: இந்தியாவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டில் செயல் இழந்துள்ள விமான நிறுவனங்களை மீண்டும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இத்துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜு தெரிவித்தார்.

31-32 விமான நிலையங்கள்

31-32 விமான நிலையங்கள்

மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பனர்ஜி அவர்களைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கஜபதி ராஜு, "இந்தியாவில் சுமார் 31-32 விமான நிலையங்கள் இயங்காத நிலையில் உள்ளது, இதில் ஒன்று மேற்குவங்கம் Coochbehar பகுதியில் உள்ளது. இவ்விமான நிலையங்களை முழுமையாகவும் விரைவாகவும் இயங்க புதிய திட்டவடிவத்தை வகுக்கத் திட்டமிட்டுள்ளோம்." என அவர் கூறினார்.

சிறிய ரக விமானங்கள்

சிறிய ரக விமானங்கள்

மேலும் இந்தியாவில் முடங்கிக் கிடக்கும் விமான நிலையங்களில் பலவற்றில் ஓடுபாதை ஜெட் விமானங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளது. இத்தகைய விமான நிலையங்களில் சிறிய ரக விமானங்களின் செயல்பாடு வர உள்ளது.

220 நாட்கள்

220 நாட்கள்

இதுமட்டும் அல்லமல்ல கொல்கத்தா விமான நிலையைத்தின் மேம்பாட்டுப் பணிகள் அடுத்த 220 நாட்களுக்குள் நிறைவடையும் எனக் கஜபதி ராஜு மேற்குவங்கு முதல் அமைச்சருக்கு உறுதியளித்தார்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

புதிய திட்டமாகக் கொல்கத்தாவில் இருந்த ஐரோப்பாவிற்கு நேரடி விமானச் சேவையை மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா மூலம் அளிக்கவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+