மும்பை: இந்திய வங்கிகளில் நிலவும் வராக் கடன் பிரச்சனையைக் குறைக்கவும், அரசு வங்கிகளுக்குக் கூடுதல் உரிமைகள் மற்றும் அதிகாரத்தை அளிக்க மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை 52 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனால் வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச் சுமையும், வங்கி நிர்வாகத்திற்கு அதிகம் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகும்.
அருண் ஜேட்லி..
அனைத்து இந்திய வங்கி அமைப்புகளின் 68வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அரசு வங்கிகளுக்கு வர்த்தகச் சந்தையில் கூடுதல் அதிகாரம் மற்றும் உரிமைகள் தேவைப்படுகிறது.
இதனால் பணியாளர்கள் பிரச்சனைகள் முதல் வராக்கடன் அளவுகளின் உயர்வு போன்ற அனைத்தும் எளிமையாகவும், திறன்படச் செயல்படுத்தவும் முடியும் என ஜேட்லி தெரிவித்தார்.
52 சதவீத பங்கு இருப்பு
அரசுடைமை வங்கிகளின் மீதான மத்திய அரசின் முதலீட்டு அளவை 52 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வுகள் எட்டப்படும் என அருண் ஜேட்லி 68வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பொதுத்துறை வங்கிகள்
இதன் மூலம் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் கூடுதலான உரிமைகள் பெற்றுச் சந்தையில் சிறந்து விளங்க முடியும். அதுமட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளுக்கு இணையாக வர்த்தகச் சந்தையில் போட்டுப்போட முடியும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
மோடியின் கருத்து..
இந்தியாவில் இனி எந்த ஒரு வங்கியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் தனிதன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜேட்லியிடம் தெரிவித்தாகக் கூறினார்.
பங்கு இருப்பு..
தற்போதைய நிலையில், எஸ்பிஐ வங்கியில் 59 சதவீதமும், ஐடிபிஐ வங்கியில் 76.5 சதவீதமும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 59 சதவீதமும், கனரா வங்கியில் 64.5 சதவீத பங்குகள் மத்திய அரசின் கைவசம் உள்ளது.
அதேபோல் பாங்க் ஆஃப் பரோடா 57.5 சதவீதம், அலகாபாத் வங்கியில் 60 சதவீதம், ஆந்திர வங்கியில் 64.4 சதவீதம், பாங்க் ஆஃப் இந்தியாவில் 81.5 சதவீதம், சென்டரல் பாங்க் ஆஃப் இந்திய வங்கியில் 81.5 சதவீதம் என மத்திய அரசு அனைத்து முக்கிய வங்கிகளும் தனது பங்கு இருப்பை வைத்துள்ளது.
52 சதவீதம்..
இந்தப் பங்கு இருப்பு அளவுகளை 52 சதவீதமாகக் குறைக்கவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழு ஆலோசனை செய்து வருகிறது. இது மத்திய அரசின் நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதி எனவும் வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications