டெல்லி: இந்திய சந்தையில் சில முக்கிய நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் போன்றவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வருகின்றனர், இதனால் உள்நாட்டுச் சந்தையில் இதன் உற்பத்தியை மற்றும் வர்த்தகம் அதிகளவில் பாதித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, உடனடி நடவடிக்கையாக நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் போன்றவற்றின் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை தடலடியாக உயர்த்தியுள்ளது.
40 சதவீத இறக்குமதி வரி..
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் ஆகியவற்றின் இறக்குமதி வரியை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகளை வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்ச் 31, 2016
இப்புதிய வரி விதிப்பு 2016ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள்
சர்வதேச சந்சையில் பால் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் விற்பனை மற்றும் வர்த்தகர்கள் அதிகளவில் வெளிநாட்டுச் சந்தையை நாடத் துவங்கியுள்ளனர்.
இதனால் கூடிய விரைவில் இந்திய சந்தையில் இப்பொருட்களின் மீதான உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளது. இதனைக் களையவே மத்திய அரசு இத்தகைய முடிவுகளை அறிவித்துள்ளது.
ஸ்டீல் மற்றும் எஃகு
இதேபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு ஸ்டீல் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதியில் அமல்படுத்தியது.