மும்பை: பொதுவாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹாட்ச்பேக் கார்களுக்குத் தனியிடம் உண்டு. இதில் முக்கிய இடத்தைப் பிடித்த வோக்ஸ்வாகன் போலோ கார்களை இனி விற்க வேண்டாம் என அனைத்து டீலர்களுக்கு வோக்ஸ்வாகன் நிறுவனம் அவரச தந்தி அனுப்பியுள்ளது.
இதனை உடனடியாக அமலாக்கம் செய்யவும் இந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
என்னதான் பிரச்சனை..
நோ டெலிவரி..
வோக்ஸ்வாகன் நிறுவனத்தில் இருந்து டீலர்களுக்கு வந்த அறிக்கையில், இனி எந்த ஒரு டீலரும் வோக்ஸ்வாகன் போலோ கார்களை டெலிவரி செய்ய வேண்டாம் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அசிஷ் குப்தா மற்றும் பங்கஜ் ஷர்மா ஆகியோரின் கையெழுத்துடன் ஈமெயில் கிடைத்துள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
வோக்ஸ்வாகன்
இந்த நடவடிக்கையை வோக்ஸ்வாகன் இந்தியா நிர்வாகமும் செய்தியாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.
பிரச்சனை
உலகளவில் நடந்து வரும் பிரச்சனைகளை எதிர்கொள் முன்கூடிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வோக்ஸ்வாகன் இந்தியா நிர்வாகம் விவரிக்கிறது.
EA189 எஞ்ஜின்
மாசு வெளிப்பாடு சோதனைகளை ஏமாற்றும் வோக்ஸ்வாகன் கார்களின் மென்பொருளால், இந்நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மிகப்பெரிய பிரச்சனையைச் சந்தித்து வருகிறது.
இந்த மென்பொருள் பொருத்தப்பட்டுள்ள EA189 ரக எஞ்ஜின் கொண்ட வோக்ஸ்வாகன் வாகனங்கள் ஏராளமாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பிரச்சனையைக் களையவே இந்நிறுவனம் முன்கூடிய நடவடிக்கை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications