டெல்லி: சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சில மாதங்களுக்கு முன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர்களையாவது நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 2 முறை கால நீட்டிப்பும் செய்யததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் இன்னும் சில நிறுவனங்களின் பெண் இயக்குநர்களை நியமிவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில் 370 நிறுவனங்களுக்கு மும்பை பங்குச் சந்தை அபராதம் விதித்துள்ளது. ஜூன் 30-ம் தேதி வரையில் பெண் இயக்குநர்களை நியமனம் செய்யாத 530 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பெண் இயக்கு நர்களை நியமனம் செய்யாத நிறுவனங்கள் 50,000 ரூபாய் அபராதமும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பெண் இயக்குநர்களை நியமிக்காத நிறுவனங்களுக்கு 50,000 ரூபாயுடன் ஒரு நாளைக்கு 1000 ரூபாய்(பெண் இயக்குநர்களை நியமிக்கும் வரை) அபராதம் விதிக்கப்படும்.
அக்டோபர் 1 முதல் 1.42 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பெண் இயக்குநர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்றால் இந்த அபராதம் தவிர இதர ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவும் செபி அமைப்பு திட்டமிட்டுள்ளது.