டெல்லி: கால் டிராப் பிரச்சனையை சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் இனி 1 ரூபாய் செலுத்த வேண்டும் என டெலிகாம் துறையின் கட்டுப்பாட்டு அணையமான டீராய் முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், இத்துறையின் முக்கிய அதிகாரிகள் டிராய் அமைப்பின் புதிய தீர்மானத்தை குறித்து தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளுக்கு 3 ரூபாய்..
ஒரு கால் டிராப்பிற்கு 1 ரூபாய் வீதம் 1 நாளில் 3 ரூபாய் வரை செலுத்த தொலைதொடர்பு நிறுவனத்திற்கு அனுமதி உண்டு. மூன்று முறைக்கு மேல் கால் டிராப் சந்திக்கும் வாடிக்கையாளரின் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிராய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
பீதியில் தொலைதொடர்பு நிறுவனங்கள்
இத்தீர்மானம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர் அதிகளவில் லாபம் அடைவார்கள், இதனால் தொலைதொடர்பு நிறுவனங்களின் கஜானா காலி ஆகவும் வாய்ப்பு உள்ளது.
இப்பிரச்சனையை தீர்க்க ஓரே வழி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை மற்றும் நெட்வொர்க் தரத்தை உயர்ந்து கால் டிராப் பிரச்சனையை தவிர்க வேண்டும்.
நீதிமன்றம்
டிராய் அமைப்பின் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாட்டின் முன்னணி நிறுவனங்களான வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பை..
டிராய் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் அதிகளலிலான கால் டிராப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
செகண்ட்ஸ் பேமென்ட்
கடந்த சில வாரங்கள் முன்பே டிராய் அமைப்பு அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இனி வாடிக்கையாளர்களிடம் நெடிக்கணக்கில் கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கால் டிராப் பிரச்சனைக்கு 1 ரூபாய் அபராதம் என்பது மிகவும் அதிகம் எனவும் டெலிகாம் நிறுவனங்கள் கூறுகிறது.