டெல்லி: கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையான போட்டியின் நடுவில் ஐடிஎப்சி மற்றும் பந்தன் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிக்க ஒப்புதல் அளித்தது. இதில் பந்தன் வங்கி கடந்த மாதம் முழுமையாக இயங்கத் துவங்கியது.
இந்நிலையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஐடிஎப்சி வங்கி வெற்றிகரமாகத் துவங்கப்பட்டது.
ஐடிஎப்சி வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் இந்திய வங்கித்துறையில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளைப் பற்றி அதிகளவில் பேசினார்ய
இந்திய வங்கித்துறை
மத்திய அரசு இந்திய வங்கித்துறையில் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் அறிவித்து வருகிறது. குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளில் மறு முதலீட்டு நடவடிக்கை, உயர் அதிகாரிகளை நியமிக்கப் புதிய வழிமுறைகள், கருப்புப் பணத்தை ஒழிக்கக் காகிதமில்லா பணப் பரிமாற்ற சேவையே ஆகியவை வங்கித்துறை புதிய வளர்ச்சியை ஏற்படுத்த உள்ளது எனப் பிரதமர் மோடி பேசினார்.
மொபைல் பாங்கிங்
இந்தியாவில் தற்போது தனியார் வங்கி மட்டும் அல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் தொழில்நுட்ப உதவியுடன் புதிய வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. இந்நிலையில் இண்டர்நெட் வங்கி சேவைகளையும் தாண்டி தற்போது மொபைல் வங்கிச் சேவை நாட்டில் பிரபலம் அடைந்து வருகிறது.
இது இத்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் வெற்றியாகும்.
காகித பணம்..
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூபாய் தாள்களை அச்சடிக்க ஆகும் செலவுகளைக் குறைக்கப் பல வழிகளை ஆலோசனை செய்து வரும் நிலையில் மின்னணு பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் நன்மை அளித்து வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
முதலீடு
மேலும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 70,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதேவேளையில் வங்கிகளின் மிகப்பெரிய தலை வலியாக விளங்கும் வராக்கடன்களைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிராம மக்கள்
வங்கிகள் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சேவை புரியவே. வங்கித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன.
பொருளாதார நிலை
உலக அளவிலான பொருளாதார மந்த நிலையை இந்தியா சிறப்பாக எதிர்கொள்ளும் என்று உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications