ஸ்னாப்டீல், பேடிஎம் உடன் இணைந்தார் சத்ய நடெல்லா..!

மும்பை: இந்தியாவில் உருவாகும் ஸ்மார்ட் சிட்டிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட டெக்னாலஜி நிறுவனங்களுக்கு உதவிக் கரம் நீட்ட எப்போதும் தயாராக உள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா தெரிவித்தார்.

மேலும் அவர் இந்தியாவில் உள்ள ஸ்டாப் அப் கலாச்சாரம் மற்றும் ஈகாமர்ஸ் துறையின் வளர்ச்சி தனக்கு வியப்புக்குரியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்திய தலைமை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் ‘Future Unleashed: Accelerating India,' என்னும் நிகழ்ச்சியை 100க்கும் மேற்பட்ட ஸ்டார்அப் மற்றும் முக்கிய நிறுவன தலைவர்கள் மத்தியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நடெல்லா அவர்களும் கலந்துகொண்டார்.

ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு..

ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு..

இந்நிறுவனத்தின் கிளவுட் சேவையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இணையதளச் சேவையை மக்களுக்கு அளிக்கச் சத்ய நாடெல்லா ஜஸ்ட்டயல், பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.

கிளவுட் சேவை

கிளவுட் சேவை

ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஸ்மார்ட் சிட்டிகளில் இருக்கும் பல ஸ்டாட்அப் நிறுவனங்களுக்கும் தங்களது கிளவுட் சேவையை அளிக்க உள்ளதாகச் சத்ய நாடெல்லா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

மேலும் இச்சேவையின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லூமியா 950, 950X' மற்றும் சர்பேஸ் ஃபரோ 4 ஆகியவற்றையும் இணைக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

 

3 டேட்டா சென்டர்கள்

3 டேட்டா சென்டர்கள்

இந்திய சந்தையில் தனது கிளவுட் கம்பியூட்டிங் சேவையை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் 12 மாதங்கள் முன் 3 இடங்களில் புதிய 3 டேட்டா சென்டர்களை அமைத்தது. இந்த டேட்டா சென்டர்கள் புனே, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+