டெல்லி: அக்டோபர் மாதத்தில் நாட்டின் மறைமுக வரி வசூல் அளவு 36.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் மொத்த மறைமுக வரி வசூல் அளவுகள் 35.9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதில் கலால் வரி வசூல் அளவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தொடர் கலால் வரி அதிகரிப்பில் இதன் வசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் மொத்த கலால் வரி உயர்வு 1,47,685 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 87,588 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது, இதில் மத்திய அரசு 68.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் பொட்ரோலியம் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி விதிப்பில் மொத்த கலால் வரி வசூலில் 79 சதவீதமாகும்.
அதேபோல் சேவை வரி வசூலில் சுமார் 26 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ள மத்திய அரசு.