லண்டன்: அணு சக்தி துறையில் மட்டும் அல்லாமல் பிரிட்டன், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை, சைபர் செக்கியூரிட்டி போன்ற துறைகளிலும் இணைந்து செயல்படும் 9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தங்களில் இரு நாட்டு நிறுவனக்களும் கையெழுத்திட்டுள்ளது.
இதன் உடன் இங்கிலாந்தில் ரயில்வே ரூபாய் பத்திரங்களும் வெளியிடப் பிரட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டேவிட் கேமரூன்
9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அடுத்துப் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம், இனி இந்தியாவிற்கும் பிரட்டனுக்கு இடையே உள்ள நட்பு "new dynamic modern partnership" ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்,
அதுமட்டும் அல்லாமல் யுஎன் செக்கியூரிட்டி கவுன்சிலில் இந்தியா இடம் பெறும் எனவும் டேவிட் தெரிவித்தார்.
மோடி
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த சில மாதங்களாகவே லண்டனில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையிலும் பிரிட்டினில் பல நிறுவனங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
ரூ.100 கோடி மதிப்புள்ள பத்திரங்கள்
மேலும் மோடியின் மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த கொள்கைகளுக்கு இணங்க ரூபாய் மதிப்பிலான பத்திர விற்பனைக்கு ஆப்-ஷோர் தளமாகப் பிரட்டன் இருக்கும் எனவும் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
இதன் மூலம் அடுத்தச் சில மாதங்களில் இந்திய ரயில்வே துறை சார்பாகப் பிரட்டனில் ரூ.100 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட இந்திய முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
மேலும் வெள்ளிக்கிழமை காலையில் இரு நாட்டுப் பிரதமர்களும் சுமார் 90 நிமிடங்கள் நீடித்த ஆலோசனை நடத்தினர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications