பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், 2016-17ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் விற்பனை பிரிவு துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் போனஸ் மற்றும் ஊக்கத் தொகையை அளிக்கத் துவங்கியுள்ளது.
பொதுவாக ஐடி நிறுவனங்களில் வருடாந்திர ஊதிய உயர்வு குறைவாக இருந்தாலும், இத்தகைய ஊக்கத் தொகை மற்றும் போனஸ் தொகை ஊழியர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
சிறப்புப் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை
இன்போசிஸ் நிறுவனத்தில் 2015ஆம் நிதியாண்டில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கும், விற்பனை பிரிவில் இலக்கை எட்டியவர்களுக்குச் சிறப்புப் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை அளிக்கத் துவங்கியுள்ளது இன்போசிஸ்.
ஒவ்வொரு காலாண்டிலும்..
நிறுவன செயல்பாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்கள் பணி திறனைக் கணக்கீட்டு ஊக்கத் தொகை வழங்கப்படும், மேலும் இது நிறுவனத்தின் விருப்பத்தின் பெயரில் கொடுக்கப்படும் என இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவீன் ராவ் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு
மேலும் 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 20,000 பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பணியில் சேர்க்க இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் துறை
அமெரிக்க டிஜிட்டல் துறை சேவை நிறுவனங்களில் இந்தியாவின் இன்போசிஸ் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக குளோபல் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான எவரஸ்ட் குரூப் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 10.60 புள்ளிகள் சரிந்து 1,097 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்போசிஸ்
இந்நிறுவனத்தை பற்றி பிற முக்கியமான செய்திகளை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.