டெல்லி: இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் குறைவான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் ஆகிய காரணங்களால் இந்திய சந்தையில் இருந்து கடந்த 2 வாரத்தில் மட்டும் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 2,800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரும்பப்பெற்றுள்ளனர்.
கடந்த 7 மாதத்தில் அக்டோபர் மாதத்தில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2 முதல் 13ஆம் தேதிகள் வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,505 கோடி ரூபாய் இந்திய சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. இதில் 313 கோடி ரூபாய் கடன் சந்தையில் இருந்தும் 2,819 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இருந்தும் வெளியேறியுள்ளது.
2015ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 22,350 கோடி ரூபாய் முதலீடு செய்து முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன் 20,723 கோடி ரூபாய் முதலீடு என்பதே உச்சக்கட்டமாக இருந்தது.