ஹைதராபாத்: இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டில் சுமார் 7,000 ஊழியர்களை நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வங்கியின் விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய சேவையின் அறிமுகத்திற்குத் தேவையான ஊழியர்களை நியமிக்கும் பணியில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் இறங்கியுள்ளது.
700 வங்கிக் கிளைகள்
நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கி சுமார் 700 வங்கிக் கிளைகளைத் திறக்க உள்ளது. மேலும் பல புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதனைக் கையாள சுமார் 2,000 பி.ஓ அதிகாரிகளையும், 5,000 கிளர்க் பணியாளர்களையும் நியமிக்க உள்ளோம் என எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜ்நீஷ் குமார் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சி
மேலும் வங்கி அமைப்பில் இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் வளர்ந்துள்ள நிலையில், ஊழியர்களின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் ராஜ்நீஷ் கூறினார்.
2015ஆம் நிதியாண்டு
நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 100 கிளைகள் திறக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 600 கிளைகளின் துவங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார்.
ஈ-வேலெட்
எஸ்பிஐ வங்கி சமீபத்தில் ஈ-வேலெட் என்னும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வங்கி சேவைக்கான மொபைல் ஆப் அறிமுகப்படுத்தியது.
மேலும் அடுத்தச் சில வாரங்களில் சாதாரண மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டுவா என்னும் மொபைல் ஆப்பை 13 இந்திய மொழிகளில் இயங்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பட்டுவா என்பதற்குக் கைப்பை (Purse) எனப் பொருள்
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications