புனே: நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி கரக்பூரை சேர்ந்த அபிஷேக் பண்ட் என்ற கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவு மாணவருக்குக் கூகுள் நிறுவனம் 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வளைத்துப்போட்டுள்ளது.
பொதுவாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஐஐடி மற்றும் ஐஐஎம் மாணவர்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு, இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியேறு மாணவர்களை நிறுவன பணியில் அமர்த்த கூகுள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
அபிஷேக் பண்ட்
ஐஐடி கல்லூரியிலி இறுதியாண்டு பொறியியல் பயின்று வரும் அபிஷேக் பண்ட், கூகுள் நிறுவனத்தில் 3 மாத இன்டர்ன்ஷிப் வெற்றிகரமாக முடித்த பிறகு கூகுள் நிறுவனம் இவருக்கு நிறுவனப் பங்குகளுடன் 2 கோடி ரூபாய் சம்பளம் அளித்துள்ளது.
அதற்கு முன் இவர் கூகுள் நிறுவனத்தின் டிசைன் சொல்யூஷன் செல் பிரிவில் இணைய முக்கியமான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கச் சிட்டிசன்..
அபிஷேக் பண்ட் அவர்களின் குடும்பம் 2006ஆம் ஆண்டுப் புனே வரும் முன் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதனால் இவர் பிறந்ததும், வளர்ந்ததும் அமெரிக்காவில் தான். தற்போது தனது வேலைக்காக மீண்டும் அபிஷேக் அமெரிக்கா செல்ல உள்ளார்.
பயணம்
புனே முதல் கலிபோர்னியா வரையிலான பயணம் மிகவும் விறுவிறுப்பாக எனக்கு அமைந்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் இன்டர்னாகப் பணியாற்றி அனுபவம் அற்புதமாக இருந்தது என அபிஷேக் தெரிவித்தார்.
செப்டம்பர் 2016
கூகுள் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் தேர்வாக 2 முறை தொலைப்பேசி மூலம் தேர்வுகளும், ஒரு முறை கோடிங் தேர்வு வைக்கப்பட்டது. இந்த மூன்றிலும் வெற்றிபெற்றபின் 3 மாதம் கூகுள் நிறுவனத்தின் மொடைன்வியூவ் அலுவலகத்தில் இன்டர்னாகப் பணியாற்றினேன்.
தற்போது மேற்படி தேர்வுகளை வெற்றிபெற்றால் 2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தின் இணைந்திடுவேன் என அபிஷேக் தனது அனுபவத்தைக் கூறினார்.
சேத்தன் காககர்
சில நாட்களுக்கு முன்னரே டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சேத்தன் காககர் என்ற பொறியியல் மாணவருக்கு 1.27 கோடி ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் இவரைப் பணியில் அமர்த்தியது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications