டெல்லி: மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர்இந்தியா, இன்று டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ வரையில் நிறுத்தம் இல்லாத (Non-Stop) விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இச்சேவைத் துவங்கிய சில நிமிடங்களில் டிசம்பர் மாதத்திற்கான 90 சதவீத டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டது உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி
செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஏர் இந்தியாவின் இப்புதிய சேவைக் குறித்துப் பேசினார். அப்போது அங்குக் கூடியிருந்த இந்திய மக்கள் அனைவரும் இச்சேவைக்குப் பராட்டுகளைத் தெரிவித்தனர்.
டிக்கெட் விற்பனை
இதற்கு ஏற்றார் போல் சேவை அறிமுகம் செய்த சில நிமிடங்களில் ஒரு மாதத்திற்கான டிக்கெட்கள் அனைத்து விற்பனை அடைந்துள்ளது.
வாரத்தில் 3 நாள் மட்டும்..
ஏர்இந்தியா இச்சேவையை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அதாவது ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டுமே இயக்குவதாக அறிவித்துள்ளது.
நான்ஸ்டாப் விமானச் சேவை
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் உலகில் 39 இடங்களுக்கு 33 விமான நிறுவனங்களின் மூலம் நிறுத்தமில்லா விமானச் சேவையை அளித்து வருகிறது. இதில் ஏர்இந்தியாவின் இப்புதிய சேவையும் இணைந்துள்ளது.
லாபம்.. சுபம்..
மேலும் ஏர்இந்தியா கடந்த சில காலாண்டுகள் வரை தொடர் நஷ்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இந்நிறுவனத்தின் அதிரடி செலவின குறைப்பு மற்றும் நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் 2015ஆம் ஆண்டுகளில் லாபகரமான நிலையில் செயல்பட்டு வருகிறது.