இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 13% உயர்வு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல்-செப்டம்பர் காலாண்டில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டின் அளவு சுமார் 16.63 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 13% உயர்வு

இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து இந்திய சந்தைக்கு 6.69 பில்லியன் டாலர் முதலீட்டு செய்யப்பட்டு, அதிகளவில் முதலீடு செய்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தைப் படித்துள்ளது. இதைத் தொடர்ந்து மொரிஷியஸ் 3.66 பில்லியன் டாலர், நெதர்லாந்து 1.09 பில்லியன் டாலர் மற்றும் ஜப்பான் 815 மில்லியன் டாலர் முதலீடு செய்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

அதிக முதலீடு பெற்ற துறைகளில் கம்பியூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் முதல் இடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 27 சதவீதம் உயர்ந்து 30.93 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு சுமார் 15 துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2015ஆம் நிதியாண்டின் முடிவில் அன்னிய முதலீட்டின் அளவு சுமார் 358 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

15 துறைகளில் அன்னிய முதலீடு அளவு உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!15 துறைகளில் அன்னிய முதலீடு அளவு உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FDI inflows rise 13% to $16.63 billion in first half of FY16

Foreign direct investment (FDI) in the country grew by 13 percent to $16.63 billion during the April-September period of the current fiscal.
Story first published: Thursday, December 3, 2015, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X