டெல்லி: அம்பானி, பிர்லா, டாடா போன்ற மிகப்பெரிய குழுமங்கள் உடனான போட்டியின் மத்தியில் ஐடிசிஎப்சி வங்கி, இந்தியாவில் வங்கி சேவை அளிப்பதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட ஐடிஎப்சி வங்கி, வங்கியியல் தொழில்நுட்ப சேவைக்காக, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இப்புதிய இணைப்பின் மூலம் ஐடிஎப்சி வங்கி, டிசிஎஸ் நிறுவனத்தின் டிசிஎஸ் BaNCS சேவையைப் பயன்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்கள் மத்தியில் கையெழுத்தானது.
டிசிஎஸ் நிறுவனத்தின் கோர் பாங்கிங் சேவையின் ஐடிஎப்சி வங்கி சேவைகள் எளிமையாகவும், மேம்படுத்தக் கூடியதாகும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கும் விதிமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இச்சேவை இந்தியா முழுவதும் சுமார் 300 பிராஜெக்ட்கள் செயல்பட்டு வருகிறது.
அடுத்த 9 மாதங்களில் டிசிஎஸ் BaNCS சேவையின் கீழ் உள்ள கோர் பாங்கிங், கார்பரேட் லோன், நிதியியல் இணைப்பு மற்றும் சர்வதேச நிதியியல் மேலாண்மை போன்ற சேவையை முழுமையாகப் பெற உள்ளது எனவும் டிசிஎஸ் குறிப்பிட்டுள்ளது.