கருப்புப் பணப் பரிமாற்றத்தில் இந்தியாவிற்கு 4வது இடம்.. சீனா முதல் இடம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷ்ங்டன்: சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகளவிலான கருப்புப் பணத்தை வெளியேற்றிய நாட்டுகளின் பட்டியலில், இந்திய 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

2004-2013ஆம் நிதியாண்டுகளில், வருடத்திற்குச் சுமார் 51 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை முறையற்ற வகையில் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு துறையின் பட்ஜெட் அளவே 50 பில்லியன் டாலர் தான்.

இந்தியா

இந்தியா

அமெரிக்க நாட்டின் சிந்தனை குழுவான குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு செய்த ஆய்வில் 2004-13ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51 பில்லியன் டாலர் கருப்புப் பணம் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது.

இந்தப் பணம் சுவிஸ் வங்கிகள், உட்பட உலகின் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நாணய வடிவிலாகவோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளாகவோ உள்ளது.

 

 

டாப் 3 நாடுகள்

டாப் 3 நாடுகள்

இப்பட்டியலில் 139 பில்லியன் டாலருடன் முதல் இடத்தைச் சீனா பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யா 104 பில்லியன் டாலர், மெக்சிகோ 52.8 பில்லியன் டாலருடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளதாகக் குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் உச்சம்..

2013ஆம் ஆண்டில் உச்சம்..

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மட்டும் 2013ஆம் ஆண்டில் சுமார் 1.1 டிரில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளியேறியுள்ளது. இதுவே கடந்த 10 வருடங்களில் உச்சமாகும்.

இக்காலகட்டத்தில் சீனாவில் இருந்து மட்டும் சுமார் 258.64 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளியேறியுள்ளது.

 

மொத்த அளவுகள்

மொத்த அளவுகள்

குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பின் படி 2004-14ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 510 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது. சீனாவில் இதன் அளவு 1.39 டிரில்லியன் டாலர், ரஷ்யாவில் 1 டிரில்லியன் டாலர்.

குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி

குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி

வர்த்தகப் பரிமாற்றத்தில் அதிகளவிலான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சரியான மதிப்பீடுகள் செய்வதன் மூலம் கருப்புப் பணத்தை அதிகளவில் குறைக்க முடியும்.

அதேபோல் அட்டீஸ் வரியைப் பயன்படுத்துவதன் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றத்தை அதிகளவில் குறைக்க முடியும்.

 

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

தற்போதைய நிலையில் கருப்புப் பணத்தை ஒழிக்க உலகில் பல நாடுகள் கடுமையான சட்ட திட்டங்களை வகுக்கத் துவங்கியுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ranks 4th in black money outflows per annum: Report

India ranks fourth in black money outflows with a whopping USD 51 billion siphoned out of the country per annum between 2004-2013, a US-based think-tank's report said today.
Story first published: Wednesday, December 9, 2015, 16:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X