டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் திட்டத்திற்கு, உலக வங்கி சுமார் 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட மத்திய அரசு சில வாரங்களுக்கு அனைத்துச் சேவைகளிலும் 0.5% சதவீத கூடுதல் வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சரியான சுகாதார வசதிகள் அளிக்க மத்திய அரசு உருவாக்கிய இத்திட்டத்திற்கு உலக வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் 2019ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
உலக வங்கியின் ஆய்வுகளின் படி உலகளவில் 2.4 பில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் தவிப்பதாகவும், அதில் 750 மில்லியன் மக்கள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதிலும் இந்த 750 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேர் இந்திய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 500 மில்லியன் மக்கள் திறந்த வெளி கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பல விதமான தொற்றுகள் பரவி வருவதாகவும், சில தொற்றுகள் மூலம் மக்கள் இறக்கும் நிலையும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதிலும் 10ல் ஒரு மரணம் இந்தியாவில் மோசமான சுகாதார வசதிகள் மூலம் நடைபெறுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசும் முனைப்புடன் செயல்பட்டு விரைவில் இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் உலக வங்கியின் 1.5 பில்லியன் டாலர் கடனில் 25 மில்லியன் டாலர் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications