டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் திட்டத்திற்கு, உலக வங்கி சுமார் 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட மத்திய அரசு சில வாரங்களுக்கு அனைத்துச் சேவைகளிலும் 0.5% சதவீத கூடுதல் வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சரியான சுகாதார வசதிகள் அளிக்க மத்திய அரசு உருவாக்கிய இத்திட்டத்திற்கு உலக வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் 2019ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
உலக வங்கியின் ஆய்வுகளின் படி உலகளவில் 2.4 பில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் தவிப்பதாகவும், அதில் 750 மில்லியன் மக்கள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதிலும் இந்த 750 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேர் இந்திய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 500 மில்லியன் மக்கள் திறந்த வெளி கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பல விதமான தொற்றுகள் பரவி வருவதாகவும், சில தொற்றுகள் மூலம் மக்கள் இறக்கும் நிலையும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதிலும் 10ல் ஒரு மரணம் இந்தியாவில் மோசமான சுகாதார வசதிகள் மூலம் நடைபெறுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசும் முனைப்புடன் செயல்பட்டு விரைவில் இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் உலக வங்கியின் 1.5 பில்லியன் டாலர் கடனில் 25 மில்லியன் டாலர் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications