டெல்லி: மத்திய அரசு 2015ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை 8.1-8.5 சதவீத வளர்ச்சியில் இருந்து 7.1-7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனால் பட்ஜெட் பற்றாக்குறை, வரி வசூல் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்குகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 7-7.5 சதவீதம் வரையில் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சில்லறை பணவீக்கத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் தெரிவித்தது.
அதேபோல் இந்தியாவில் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதால் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிப்படைந்து 7.1-7.5 சதவீதமாகக் குறைய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.