சென்னை: நீங்கள் சரியாகக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே சமயத்தில் ஒரே மாறியான இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கி இருந்தாலும், அவரது பிரீமியம் தொகை அதாவது தவணைதொகையின் அளவு உங்களை விடக் குறைவாக இருக்கும். ஏன் இப்படி..?
குழப்பம் வேண்டாம், உங்கள் குழப்பத்தைத் தீர்க்கவே இந்தச் சிறப்புக் கட்டுரை..
உங்களுக்கான பிரீமியம் தொகை கணக்கிடுவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல காரணிகளைக் கணக்கில் கொண்டு தொகையைத் தீர்மானம் செய்கிறது. எனவே தான் உங்களுக்கும் உங்கள் நண்பரின் பிரீமியம் தொகை மாறுபடுகிறது. சரி அப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதைக் கொண்டு தான் தவணைத் தொகையைக் கணக்கிடுகின்றனர். உங்களுடைய வயது தான் முதல் மற்றும் அதிமுக்கிய காரணியாகும். ஏனென்றால் 25 வயதுடைய ஒவருவருக்கு மிகப்பெரிய அளவிலான வியாதிகள் இருக்காது, அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இந்நிலையில் 35 வயதுடைய ஒருவருக்கு நோய் பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். இத்தகைய பாதிப்பால் சிலருக்கும் மரணம் கூட ஏற்படலாம். இந்நிலையில் 25 வயதுடையவர் குறைந்த அளவிலான பிரீமியமும், 35 வயதுடையவர் அதிகப் பிரீமியம் தொகையும் செலுத்தும் வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வடிவமைக்கும். அறிவியல் ரீதியாகப் பெண்கள் அதிகக் காலம் வாழ்வார்கள், அதனால் பெண்களுக்கான ஈவுத்தொகை குறைவாக இருக்கும். அதேபோல் வாழ்க்கை முறையில் பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் உள்ள காரணத்தாலும் தவணைத் தொகை குறைவாக இருக்கும். இதனால் உங்கள் பாலினம் சார்ந்தும் பிரீமியம் தொகை மாறுபடும். மேலும் புகை மற்றும் குடி பழக்கம் கொண்டவர்களுக்கு அதிகப் பிரீமியம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ் மேலும் பாலிசிதாரரின் குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய், அல்சைமர், இருதய நோய் மற்றும் கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் பாலிசிதாரரின் தவணைத்தொகை அதிகரிக்கும். இதற்கான தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உறுதிசெய்துகொள்ளும். தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோனைகளும் செய்யத் தூண்டும். பாலிசிதாரரின் தற்போதைய உடல்நலம் குறித்தும் மருத்துவப் பரிசோனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தும். இதில் பாலிசிதாரர் அவர்களின் எடை, உயரம், இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மற்றும் வைடமின் குறைபாடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு அதற்கு ஏற்றபடி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தவணைத்தொகையில் மாற்றத்தை அறிவிக்கும். நீங்கள் ஆபத்து நிறைந்த தொழில் அல்லது வேலை செய்பவராக இருந்தால் கூட உங்களுக்கான பிரீமியம் தொகை அதிகமாக வசூல் செய்யப்படும். குறிப்பாக ஸ்கை டைவிங், டீப் சீ டைவிங், மலையேறுதல், தீயணைப்பு வீரர்கள், பைலட் போன்ற பணிகளில் வேலைசெய்வோர். கடைசியாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் சார்ந்தும் உங்களின் பிரீமியம் தொகை மாறுபடும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
வயது
பாலினம்
பழக்கவழக்கம்
குடும்ப மருத்துவ வரலாறு
உடல் நலம்..
உங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்கள்..
இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications