மும்பை: நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 4 பிளாட்களை (வீடுகள்) நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கைப்பற்றியுள்ளது.
மும்பை டோனி பெடார் சாலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான 4 பிளாட்களைச் சுமார் 90 கோடி ரூபாய்க்கு வாங்கப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இத்தொகையை முழுவதும் பணமாக எஸ்பிஐ வங்கி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான ஒப்பந்த பத்திரங்களைத் தயார் செய்யும் பணியில் ஏர் இந்தியா ஈட்டுப்பட்டுள்ளது. மேலும் இப்பரிமாற்றம் முழுமையாக முடிவடையச் சுமார் 1 மாத காலம் தேவைப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கான 30,000 கோடி ரூபாய் பிணையெடுப்பு தொகையின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்க இந்நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தற்போதைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 40,000 கோடி ரூபாய்.