பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக அபித் அலி நீமச்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
அபித் அலி நீமச்வாலா
கடந்த 5 வருடமாக இப்பதவியில் இருந்த டி.கே குரியன், தற்போது அசிம் பிரேம்ஜி-யின் உத்திரவின் படி விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையால் தற்போது டி.கே குரியன் இடத்தை அபித் அலி நீமச்வாலா பிடித்துள்ளார்.
பிப்ரவரி முதல்
இவர்கள் இருவரின் பணி வருகிற பிப்.1ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி.கே குரியன்
மேலும் டி.கே குரியன் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் வருகிற மார்ச் 31,2017ஆம் ஆண்டு வரை இருப்பார் எனவும் விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தில் பல வருடங்களுக்குப் பின் உயர் மட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவராக இனி டி.கே குரியன், அபித் அலி நீமச்வாலா மூலம் வாடிக்கையாளர் மற்றும் புதிய தொழில்நுட்பம் வளர்ச்சியில் புதிய பாதை அமைப்பார் என இந்நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தெரிவித்தார்.
9 மாத பணி
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அபித் அலி நீமச்வாலா விப்ரோ நிறுவனத்தில் கடந்த 9 மாத நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.